Tuesday, March 17, 2009

இளமைப்பருவம்


பண்டிதர் வாழ்ந்த சென்னை பகுதியில் 1869 - "சூர்யோதயம் "இதழ் வெளிவந்தது அதை புதுப்பேட்டை வேங்கிடசாமி பண்டிதர் நடத்தினார். 1871 இல்" பஞ்சமன் "இதழும் வெளிவந்தது. அதில் தமிழ்,தமிழக வரலாறு போன்றவற்றை படித்த பண்டிதர் தாழ்த்தப்பட்ட மக்கள் எப்படி தாழ்த்தப்பட்டார்கள்? குறித்து விரிவாக சிந்தித்தார். அதன் பயனாக சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களை எவ்வாறு விடுவிப்பது ? அவர்களை எப்படி அரசியல் படுத்துவது என சிந்தித்தார். தன் தந்தை கந்தசாமியோடு ஊட்டி சென்றார் தன் 25 வயதில் "அத்வைதானந்த" சபையை 1870௦ இல் உருவாக்கி நடத்தினார். நீலகிரியில் தேயிலைத் தோட்டப் பணியாளர்களையும் மலையின பழங்குடி மக்களையும் ஒருங்கிணைத்தார் . இதன் மூலம் சாதிபேத உணர்வை ஒழிக்க முற்பட்டார். மருத்துவப் பணிகளையும் செய்தார். மலையின பெண்ணை கலப்புத் திருமணம் செய்துகொண்டார். இரங்கூன் சென்றார் அங்கே தனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது அதற்கு தசரதராமன் என் பெயர் சூட்டினார். அந்த குழந்தையும் அவரது மனைவியும் நோயினால் இறந்துபோனார்கள்.

No comments:

Post a Comment